Skip to main content

காஷ்மீர் தேர்தல் தரும் புதிய நம்பிக்கைகள்.


காஷ்மீர் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த வாக்கு பதிவின் போது பொது மக்கள் திவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி கடும் பனி மற்றும் குளிரையும் (-11 c) பொருட்படுத்தாது பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்து உள்ளனர். சராசரி வாக்கு பதிவு சுமார் 55 சதவீதம் என்று முதல் கட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது . பிரிவினை வாதம் பேசப் படும் காஷ்மீரில் இவ்வளவு மக்கள் (இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து) வாக்கு அளித்து இருப்பது மன நிறைவை தருகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பண்டிபோரா (Bandipora) மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் 74 சதவீதம் வாக்கு பதிவு ஆகி இருப்பது. ஏனெனில், இந்த மாவட்டத்தை தீவிரவாதிகள் தமது பிரிவினை வாத முயற்சிகளுக்கு சோதனை களமாக (Test Case/ Pilot Project) பயன்படுத்தியது குறிப்பிடத் தக்கது. தீவிரவாதிகளின் கனவு மாவட்டமே அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.

இந்த தேர்தலில் வாக்கு பதிவின் துவக்கத்திலேயே மூன்றாவது நபராக வந்து ஒரு (சரணடைந்த) முன்னாள் தீவிரவாதி வாக்கு அளித்திருப்பதும், பல வாக்காளர்கள், விடுதலைக்காக சில காலம் காத்திருக்கலாம், ஆனால் மாநில வளர்ச்சிக்காக காத்திருக்க முடியாது என்று பேட்டி அளித்திருப்பதும் கவனிக்க வேண்டியவை.

முதல் கட்ட தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த மத்திய மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் , மாநில காவல் துறை மற்றும் ராணுவ துறைக்கும் வாழ்த்துகளை தெரிவிப்போம் . அதே சமயத்தில், இந்த தேர்தல் மூலம் ஏற்படுள்ள மக்கள் மன மாற்றத்தை (சிறிதளவே ஆயினும்) சிறப்பாக உபயோகப் படுத்தி, பிரிவினை வாதத்தை காஷ்மீர் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக வேரறுப்பது, மத்திய மற்றும் (இந்த தேர்தலின் மூலம் அமைய போகிற புதிய) மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு ஆகும்.

நன்றி.


சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவை விட சிறப்பாக இருக்கும் எனவே, பின்னூட்டங்களை பார்க்க தவறி விடாதீர். நன்றி.

Comments

MCX Gold Silver said…
நல்ல பதிவு
come on india come on

உங்களோடு சேர்ந்து நானும் நமது ஜனநாயகத்தை வாழ்த்துகிறேன்
Maximum India said…
Thank you valpaiyan for the comments.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.