
காஷ்மீர் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த வாக்கு பதிவின் போது பொது மக்கள் திவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி கடும் பனி மற்றும் குளிரையும் (-11 c) பொருட்படுத்தாது பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்து உள்ளனர். சராசரி வாக்கு பதிவு சுமார் 55 சதவீதம் என்று முதல் கட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது . பிரிவினை வாதம் பேசப் படும் காஷ்மீரில் இவ்வளவு மக்கள் (இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து) வாக்கு அளித்து இருப்பது மன நிறைவை தருகிறது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பண்டிபோரா (Bandipora) மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் 74 சதவீதம் வாக்கு பதிவு ஆகி இருப்பது. ஏனெனில், இந்த மாவட்டத்தை தீவிரவாதிகள் தமது பிரிவினை வாத முயற்சிகளுக்கு சோதனை களமாக (Test Case/ Pilot Project) பயன்படுத்தியது குறிப்பிடத் தக்கது. தீவிரவாதிகளின் கனவு மாவட்டமே அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.
இந்த தேர்தலில் வாக்கு பதிவின் துவக்கத்திலேயே மூன்றாவது நபராக வந்து ஒரு (சரணடைந்த) முன்னாள் தீவிரவாதி வாக்கு அளித்திருப்பதும், பல வாக்காளர்கள், விடுதலைக்காக சில காலம் காத்திருக்கலாம், ஆனால் மாநில வளர்ச்சிக்காக காத்திருக்க முடியாது என்று பேட்டி அளித்திருப்பதும் கவனிக்க வேண்டியவை.
முதல் கட்ட தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த மத்திய மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் , மாநில காவல் துறை மற்றும் ராணுவ துறைக்கும் வாழ்த்துகளை தெரிவிப்போம் . அதே சமயத்தில், இந்த தேர்தல் மூலம் ஏற்படுள்ள மக்கள் மன மாற்றத்தை (சிறிதளவே ஆயினும்) சிறப்பாக உபயோகப் படுத்தி, பிரிவினை வாதத்தை காஷ்மீர் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக வேரறுப்பது, மத்திய மற்றும் (இந்த தேர்தலின் மூலம் அமைய போகிற புதிய) மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு ஆகும்.
நன்றி.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பண்டிபோரா (Bandipora) மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் 74 சதவீதம் வாக்கு பதிவு ஆகி இருப்பது. ஏனெனில், இந்த மாவட்டத்தை தீவிரவாதிகள் தமது பிரிவினை வாத முயற்சிகளுக்கு சோதனை களமாக (Test Case/ Pilot Project) பயன்படுத்தியது குறிப்பிடத் தக்கது. தீவிரவாதிகளின் கனவு மாவட்டமே அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.
இந்த தேர்தலில் வாக்கு பதிவின் துவக்கத்திலேயே மூன்றாவது நபராக வந்து ஒரு (சரணடைந்த) முன்னாள் தீவிரவாதி வாக்கு அளித்திருப்பதும், பல வாக்காளர்கள், விடுதலைக்காக சில காலம் காத்திருக்கலாம், ஆனால் மாநில வளர்ச்சிக்காக காத்திருக்க முடியாது என்று பேட்டி அளித்திருப்பதும் கவனிக்க வேண்டியவை.
முதல் கட்ட தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த மத்திய மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் , மாநில காவல் துறை மற்றும் ராணுவ துறைக்கும் வாழ்த்துகளை தெரிவிப்போம் . அதே சமயத்தில், இந்த தேர்தல் மூலம் ஏற்படுள்ள மக்கள் மன மாற்றத்தை (சிறிதளவே ஆயினும்) சிறப்பாக உபயோகப் படுத்தி, பிரிவினை வாதத்தை காஷ்மீர் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக வேரறுப்பது, மத்திய மற்றும் (இந்த தேர்தலின் மூலம் அமைய போகிற புதிய) மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு ஆகும்.
நன்றி.
சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவை விட சிறப்பாக இருக்கும் எனவே, பின்னூட்டங்களை பார்க்க தவறி விடாதீர். நன்றி.
Comments
உங்களோடு சேர்ந்து நானும் நமது ஜனநாயகத்தை வாழ்த்துகிறேன்