Skip to main content

தோல்வியிலும் கண்ணியம்



ஒரு காலத்தில் அடிமை வம்சமாக கருதப்பட்ட ஆப்ரிக்க -அமெரிக்க இனத்தினை சேர்ந்த ஒபாமா அவர்கள் உலகின் முதல் நாடாக கருதப்படும் அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் இன்று கொண்டாடி வருகிறது. அவரது எழுச்சி மிகும் உரை பலராலும் விரும்பி படிக்கப்பட்டுள்ளது.

இதே தேதியில் தோல்வி பெற்ற மெக்-காயன் அவர்களாலும் ஒரு மிகச் சிறந்த உரை நிகழ்த்தப் பட்டுள்ளது. உரையின் சாராம்சம் கீழே.

""ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இருந்து ஒருவர் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகி இருப்பது அமெரிக்கா எவ்வளவு முதிர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் கொண்டாட வேண்டிய தருணமிது. இதற்கு காரணமான ஒபாமா அவர்களைப் பாராட்டுவோம்.

தேர்தல் சமயத்தில் ஒபாமாவும் நானும் பல விஷயங்களில் கடுமையாக விவாதம் செய்துள்ளோம். இன்னும் கூட பல கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் உள்ளது. ஆனால் கடும் சவால்களை நாடு சந்தித்து வருகின்ற இன்றைய தேதியில், இந்த நாட்டை முன்னின்று நடத்த ஒபாமாவுக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

நேற்று வரை ஒபாமா எனது போட்டியாளர். ஆனால் இன்று அவர் எனது தலைவர். நான் அவரது ஊழியன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு கோரிக்கை. அமெரிக்காவின் மேன்மையை முன்னிட்டு நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். வரலாறு படைப்போம்.""


(அவரது முழு உரையையும் படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக்கவும்)



இத்தகைய சிறந்த உரை நிகழ்த்திய மெக்-காயன் அவர்களை பாராட்டும் அதே தருணத்தில், இந்தியர்களாகிய நாம் சில விஷயங்களை அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டால் நல்லது. கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவித்து மக்களிடையே கட்சியின் அடிப்படையில் விரோதம் உருவாக்கும் நமது தலைவர்கள் (முக்கியமாக தமிழ் நாட்டு தலைவர்கள்) இந்த உரையைப் பார்த்த பிறகாவது தம்மை கொஞ்சம் மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் .

மக்களும் கூட ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். கட்சிகளுக்கு தமக்கான வேறுவேறு கொள்கைகள் தனித்தனியே கொண்டிருக்கும் உரிமை உண்டு. ஆனால் நாட்டின் நலம் என்ற பொது கொள்கையில் கூட வேறுபாடு காட்டுவது மன்னிக்க முடியாத தவறு. எனவே, தேர்தல் அற்ற கால கட்டங்களில், கட்சிகளால் தமது சுய நலத்திற்காக விதைக்கப்படும் 'கட்சி அடிப்படையில் விரோதம்' என்ற விஷ வித்துகளை வேரிலேயே களைந்து எறிய வேண்டும். மரமாக வளர விடக் கூடாது.

நன்றி.

Comments

Unknown said…
i think, if McCain spoke half well as his concession speech, he'd have won the presidency. The speech was awesome.
Maximum India said…
Thank you for the comments vasu
Anonymous said…
உண்மையான வார்த்தைகள்

எதிர்கட்சி கொண்டு வந்த காரணத்துக்காகவே எதிர்ப்பதும், எள்ளி நகையாடுவதும், அறிக்கை விடுவதும், கவிதை எழுதுவதுமாக இருக்கும் நம் தலைவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியுமா என்று தெரிய வில்லை....
KARTHIK said…
// தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவித்து மக்களிடையே கட்சியின் அடிப்படையில் விரோதம் உருவாக்கும் நமது தலைவர்கள் (முக்கியமாக தமிழ் நாட்டு தலைவர்கள்)//

நீஙகள் நினைக்கும் படி நடக்க வேண்டுமானாள்.நம் நாட்டிலும் இரு கட்சி ஆட்சிமுறை வரவேண்டும்.
Maximum India said…
அன்புள்ள meetnnk

பின்னூட்டதிற்கு நன்றி.

//எதிர்கட்சி கொண்டு வந்த காரணத்துக்காகவே எதிர்ப்பதும், எள்ளி நகையாடுவதும், அறிக்கை விடுவதும், கவிதை எழுதுவதுமாக இருக்கும் நம் தலைவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியுமா என்று தெரிய வில்லை....//


உண்மையில் leaders are the followers of the followers.

எனவே மக்கள் விரும்ப வில்லை என்று உறுதியாக தெரிந்தால் தலைவர்கள் நிச்சயம் தயங்குவார்கள்
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி.

//நீஙகள் நினைக்கும் படி நடக்க வேண்டுமானாள்.நம் நாட்டிலும் இரு கட்சி ஆட்சிமுறை வரவேண்டும்.//

நீங்கள் சொல்வது உண்மையென்றாலும் கூட, இங்கு கூட (பெரும்பாலும்) இரு கூட்டணி அரசியல்தானே நடக்கிறது. இங்கு அரசியல் வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட தொண்டர்கள் (குண்டர்கள்?) தேவைப் படுகிறது. விரோதத்தை maintain பண்ணினால்தானே மக்கள் ஒன்று சேர்வதை தடுக்க முடியும். இல்லை என்றால் (கொள்ளையடிக்கும்) கொள்கைகளில் வித்தியாசம் இல்லாத போது எதை சொல்லி கட்சி வேறுபாடுகள் காட்ட முடியும்?
எதிர்கட்சிகள் அறிக்கை விட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம், மக்களிடம் நாங்களும் இருக்கிறாம் என்ற மாயையை உருவாக்க.

மக்களீடம் விழிப்பணர்வு ஏற்பட்டு விட்டால் இங்கே எந்த அரசியல்வாதிகளும் நிற்க முடியாது,
இந்தியாவில் புதிய ஜனநாயகம் பிறக்கும்

நல்ல பதிவு
நீங்கள் எனக்கு தெரிந்து வலையை தரமான கருத்துகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்

வாழ்த்துக்கள்
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி.

//எதிர்கட்சிகள் அறிக்கை விட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம், மக்களிடம் நாங்களும் இருக்கிறாம் என்ற மாயையை உருவாக்க.

மக்களீடம் விழிப்பணர்வு ஏற்பட்டு விட்டால் இங்கே எந்த அரசியல்வாதிகளும் நிற்க முடியாது,
இந்தியாவில் புதிய ஜனநாயகம் பிறக்கும்//

நம் வாழ்நாளிலேயே இவ்வாறு நடக்குமென்று நம்புவோம். அந்த மறுமலர்ச்சிக்கு நாமும் ஒரு காரணமாக இருப்போம்.

//நல்ல பதிவு
நீங்கள் எனக்கு தெரிந்து வலையை தரமான கருத்துகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்

வாழ்த்துக்கள் //

நீங்கள் மற்றும் கார்த்திக் தொடர்ந்து தரும் ஊக்கம் இதற்கு முக்கிய காரணம். உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
அமெரிக்காவில் இதெல்லாம் அற்பமான விஷயம், இதே நம்ம ஊரில் நடந்தால் அது நம்ப முடியா விஷயம்
நஞ்சு நெஞ்சில் இருக்கிறது என அர்த்தம்...அட போங்கயா... அரசியல் மானம், மருவாத அதெல்லாம் காமராசர், பெரியாரோடு மண்ணாப் போச்சு.
Maximum India said…
அன்புள்ள அர்னோல்ட்

பின்னூட்டதிற்கு நன்றி.

//அமெரிக்காவில் இதெல்லாம் அற்பமான விஷயம், இதே நம்ம ஊரில் நடந்தால் அது நம்ப முடியா விஷயம்
நஞ்சு நெஞ்சில் இருக்கிறது என அர்த்தம்...அட போங்கயா... அரசியல் மானம், மருவாத அதெல்லாம் காமராசர், பெரியாரோடு மண்ணாப் போச்சு.//

நீங்கள் சொல்வது கூட உண்மைதான்.

அன்றைக்கு உலகின் மிக பெரும் வல்லரசாக இருந்த ஒரு நாட்டிடம் இருந்து அஹிம்சை வழியாகவே சுதந்திரம் பெற முடியும் என்று நூறாண்டுகளுக்கு முன் இங்குஅடிமையாக வாழ்ந்தவர்களுக்கு இருந்த நம்பிக்கையை கொஞ்சம் கடனாகப் பெற்றுக் கொள்வோம். நாமும் நம்புவோம் இந்திய அரசியல்வாதிகள் கூட ஒருநாள் மாறுவார்கள் என்று.
Anonymous said…
//தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவித்து மக்களிடையே கட்சியின் அடிப்படையில் விரோதம் உருவாக்கும் நமது தலைவர்கள் (முக்கியமாக தமிழ் நாட்டு தலைவர்கள்) இந்த உரையைப் பார்த்த பிறகாவது தம்மை கொஞ்சம் மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும்.//

நீங்கள் சொல்வதுபோல் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொண்டால் நாம் கட்டிக் காத்துவரும் அரசியல் `பண்பாடு’ என்ன ஆவது?

//எனவே, தேர்தல் அற்ற கால கட்டங்களில், கட்சிகளால் தமது சுய நலத்திற்காக விதைக்கப்படும் 'கட்சி அடிப்படையில் விரோதம்' என்ற விஷ வித்துகளை வேரிலேயே களைந்து எறிய வேண்டும். மரமாக வளர விடக் கூடாது.//

விதைப்பதோடு மட்டுமன்றி நீரூற்றி எருவிட்டுப் பேணி வளர்க்க ஆளிருக்கும்போது வித்துகள் மரமாகவும் வளரும்; வளர்ந்து காடாகவும் மாறும்.

ஓர் ஐயம்:

இப்போது நாடாக இருக்கிறதா, காடாக இருக்கிறதா?

- அ. நம்பி
Maximum India said…
அன்புள்ள நம்பி

உங்களுடைய கருத்துகளில் அனல் பறக்கிறது.

சிறப்பான பின்னூட்டதிற்கு நன்றி.

நம்பி அவர்களே

நம்பினார் கெடுவதில்லை.

எனவே நம்புவோம். இந்த நாட்டிற்கு நல்ல காலம் பிறக்குமென்று.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...