Skip to main content

அச்சம் தவிர்க்காதீர்!

பைபிள் முதல் பாரதி வரை அனைவரும் சொல்வது "அச்சம் தவிர்". இன்றைய மனவியல் நிபுணர்கள் கூட எப்படி அச்சத்தை தவிர்ப்பது என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். அச்சம் என்பது பொதுவாக விரும்ப முடியாத, அவநம்பிக்கை அளிக்கக் கூடிய, மன வருத்தம் தருகின்ற உணர்வாகவே மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், உண்மையில் அச்சம் என்பது நம்மை பல ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவுவதற்காக இயற்கை நமக்கு வரமாக அளித்த ஒரு அற்புதமான உணர்வு.

உதாரணமாக, நெருப்பின் மிக அருகே நம்மை செல்லாமல் தடுப்பது, நடு சாலையில் நடக்காமல் நம்மை தடுப்பது, மனதுக்கும் உடலுக்கும் தீயதான பழக்கங்களில் இருந்து நம்மை காப்பது எல்லாமே அச்ச உணர்வுதான். மான் புலியிடம் இருந்து ஓடி தப்பிப்பது கூட அச்ச உணர்வினால்தான்.

எனவே, அச்சத்தினை முழுமையாக ஒதுக்க முயற்சிப்பதை விட அச்சத்தினை எவ்வாறு நமது வாழ்விற்கு உபயோகப் படுத்தலாம் என்று பார்ப்பது நல்லது.

முதலில் அச்ச உணர்வு உடலில் என்னென (இயற்பியல் மற்றும் வேதியியல்) மாற்றங்களை உருவாகுகிறது என்று பார்ப்போம்.

அபாய எச்சரிக்கை மூளைக்குள் சென்றதும், மூளை மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு அபாயத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துகிறது. இருதயம் வேகமாக துடிக்கிறது. அதிக அளவிலான ரத்தம் உடலின் முக்கிய (அபாயத்திலிருந்து காக்க தேவையான) தசைப் பகுதிகளுக்கு செலுத்த படுகிறது. உணவு ஜீரணம் போன்ற உடனடி அவசியம் இல்லாத வேலைகள் நிறுத்தப் படுகின்றன. Adrenaline அதிக உற்பத்தி ஆகிறது. எதிர்க்கலாமா அல்லது ஆபத்திலிருந்து தப்பிக்கலாமா என்ற முடிவு மூளையினால் வேகமாக எடுக்கப் படுகிறது. உடல் என்ற அற்புத இயந்திரதிற்குள்ளே, இந்த செயல்கள் அனைத்தும் நம்ப முடியாத வேகத்தில் நடந்து முடிகிறது.

ஆனால், நடை முறை வாழ்க்கையில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, புதிய உறவுகளை சந்தித்தல், புதிய இடங்கள், மேடைப் பேச்சு போன்ற மனிதனுக்கு பெரும் ஆபத்து விளைவிக்காத விஷயங்களில் கூட பலருக்கு அச்ச உணர்வு தோன்றுகிறது. சிலருக்கு, கரப்பான் பூச்சி, நாய்கள் போன்ற விஷயங்களில் கூட அச்ச உணர்வு (போபியா) தோன்றுகிறது. இதனால், மேற்கூறிய உடலின் இயற்பியல் வேதியல் மாற்றங்கள் உடலுக்குள்ளே அடிக்கடி நடந்து உடலை மிகவும் சோர்வுக்கு உட்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி அடிப்பதினால் பழுதடைந்து அபாய மணி உண்மையான அபாய சூழ்நிலைகளில் சரியாக வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதன் காரணமாக, உண்மையான அபாய சூழ்நிலைகளில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாமல் போய் விடுகிறது.

அச்சம் என்பதனை மனவியல் நிபுணர்கள் காட்டில் உள்ள புதை குழிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். உண்மையில் புதை குழிகள் நாம் நினைப்பதை போல மிக ஆபத்தானவை அல்ல. நம்மை கொல்லக் காட்டிற்குள்ளே பொறி வைத்து காத்திருக்கும் பயங்கர வில்லன்களும் அல்ல. அவை உயிரற்ற மணலும் நீரும் கலந்த ஒரு குழி அவ்வளவே. அவற்றுள் தவறி விழுந்தாலும் கூட, ஒருவர் அமைதியாக இருந்தால் மிதக்க முடியும். பின்னர் மெல்ல மெல்ல நகர்ந்து வெளி வந்து விட முடியும். மாறாக, பெரும்பாலோர் கையையும் காலையும் வேகமாக புதைகுழியின் மேல் அடித்து தாம் உள்ளே போக தாமே காரணமாகி விடுகிறார்கள். இதற்கு காரணம் புதை குழி பற்றி முழு விவரம் தெரியாமல் போன அறியாமையே தவிர புதை குழி உண்மையான காரணம் அல்ல.

எனவே, அச்சத்தினை முழுமையாக தவிர்க்க முயற்சிப்பதையும் வெல்ல முயற்சிப்பதையும் விட்டு விட்டு, எதற்காகவெல்லாம் நாம் அச்சப் படுகிறோம் என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. மேலும் அந்த விஷயங்களில் உண்மையில் அபாயம் இருக்கிறதா என்று புரிந்து கொண்டு அபாயமில்லாத விஷயங்களுக்கு அச்சப் படும் வழக்கத்தினை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் உடலுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.

நன்றி.

Comments

என்னதான் சொல்லுங்க...பயந்தபிறகு தான் எதற்கு இப்படி பயப்படுகிறோம் என்று யோசிக்கமுடிகிறது.
Maximum India said…
நீங்கள் சொல்வது கூட நீங்கள் சொல்வது கூட ஒருவகையில் உண்மைதான்
பயம் என்பதும், மனிதன் உணர்வுதானே! பயம் எங்கு? எப்படி? எதற்கு? என்பதில்தான்.... தேவை புரிகின்றது.. நானும் பயம் பற்றி கொஞ்சம் கிருக்கியுள்ளென்.. நேரம் இருந்தால் படித்து பாருங்கள் நண்பரே..http://aammaappa.blogspot.com/2008/10/blog-post_31.html
Maximum India said…
அன்புள்ள ஞான சேகரன்

உங்களுடைய பதிவினையும் படித்துப் பார்த்தேன். இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.
Adriean said…
மிக அருமையான பதிவு.
//அன்புள்ள ஞான சேகரன்

உங்களுடைய பதிவினையும் படித்துப் பார்த்தேன். இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்.//
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே,
Maximum India said…
அன்புள்ள சந்திரன்.

நன்றி.

இது போன்ற மேலும் பல பதிவுகளை இட தங்களின் ஊக்குவிப்பை கோரும்

Maximum India

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...