Skip to main content

ஒப்பீடு (Comparison) செய்கிறீர்களா?



பறக்கும் சீக்கியர் (Flying Sikh) என்று அழைக்கப் பட்ட மில்கா சிங் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிறிக்கிறீர்களா ? இந்தியாவின் மிகச் சிறந்த தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவராக கருதப்படும் அவர் 1960 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் பதக்கம் தவற விட்டதற்கான காரணம் தெரியுமா?

மில்கா சிங் பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மேலே குறிப்பிட்ட ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் நடைப் பெற்ற சர்வதேச பந்தயத்தில் (அப்போதைக்கு) உலக சாதனை செய்து முத்லாவாதாக வந்தவர் அவர். ஒலிம்பிக் முதல் நிலை போட்டியில் கூட அவர் பெற்றது இரண்டாவது இடம். தங்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஓட்டத்தினை மிக வேகமாக தொடங்கினார். பாதியில் மற்றவர்கள் மிக நிதானமாக ஓடி வருவது போல அவருக்கு தோன்றியது. (உண்மையில் அவர்களால் இவர் வேகத்திற்கு ஓட முடியவில்லை) முதல் பாதியில் அவர்களைப் போல நிதானமாக ஓடினால்தான் தன் சக்தியை சேமித்து இறுதியில் மிக வேகமாக ஓடி கோப்பையை வெல்ல முடியும் என்று தவறாக நினைத்து வேகத்தினை சற்று மட்டுப்படுத்தினார். விளைவு, தங்கம் வெல்ல வேண்டியவர் இறுதியில் வெண்கலம் கூட வெல்ல முடியாமல் போனது. இன்றைக்கும் அதை நினைத்து அவர் வருந்தி வருகிறார்.

நாம் கூட பல சமயங்களில் மற்றவர்களோடு நம்மை ஒப்பீடு செய்து பார்க்கிறோம். அவர் போல நாம் குறிப்பிட்ட படிப்பு படிக்க வில்லையோ? இவரைப் போல குறிப்பிட்ட துறையில் சேர வில்லையோ? அவர் வாங்கியது போல அந்த குறிப்பிட்ட பிராண்ட் வாகனம் அல்லது இந்த இடத்தில நிலம் வாங்கி இருக்கலாமோ? இப்படி ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாமே சித்திரவதை செய்து கொள்கிறோம். ஒரு வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான தருணங்களில் நாம் ஒப்பீடு செய்யும் நபரும் கூட இதே போல வேறொருவரை அல்லது நம்மையே ஒப்பீடு செய்து குழம்பிப் போய் இருப்பார்.


நம்முடைய கனவு தொழிற்சாலையையே எடுத்துக் கொள்வோம். அனைவருக்கும் தெரியும். கமல் அவர்கள் ஒரு வசீகர தோற்றமுள்ள, உருவாக்கும் திறன் மிகுந்த சிறந்த நடிகர். அவர் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் எந்த சந்தேகம் இல்லை. அதே சமயம் திரு.வடிவேலு, திரு.செந்தில் போன்றவர்கள் கூட திரைத் துறையில் மிகப் பெரிய வெற்றி பெற்று உள்ளனர். கமலுடன் இவர்கள் ஒப்பீடு செய்து அவரைப் போல வசீகர தோற்றம் பெற முயற்சி செய்திருந்தால் அவர்களால் இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியுமா? தமது வசீகரமற்ற தோற்றத்தையே ஒரு மூலதனமாக மாற்றிக் கொண்டு இதரத் திறமைகளை முன்வைத்து போராடியதாலேயே அவர்களால் இன்றைக்கு போட்டி மிகுந்த ஒரு துறையில் நிலைத்து நிற்க முடிகிறது.




எனவே ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் திறமை உண்டு என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தனது சொந்த திறனை இனம் கண்டு, அதை உரிய முறையில் வளர்த்துக் கொண்டால் நம்மால் (நம்மளவில்) மிகப் பெரிய வெற்றிகளை அடைய முடியும். இதை விட்டு ஒப்பீடு செய்வது என்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் ஒரு செயலே.

நன்றி

Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.