Skip to main content

சட்டங்களும் சில கட்டங்களுக்குள்

சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு உண்ணாவிரத போராட்டத்தின் போது, சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தமது உணர்ச்சிகளை வெளிபடுத்தாமல் இருப்பதாக சிலர் கூறினர்.

பொது மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களுக்குக் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு தெரியுமா?

பேயாட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று சொன்னான் பாரதி. அதாவது பேயைப் போல தீய குணங்கள் உள்ளவர்களால் ஆட்சி நடத்தப் படும் போது அவர்களால் உருவாக்கப்படும் சட்டங்கள் பிணத்தை தின்னுவதைக் கூட (தீய செயல்கள் செய்வதைக் கூட) நியாயப்படுத்தும் என்று பொருள்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை, காங்கிரஸ் தலைவர்கள் சூரியன் மறையாத நாட்டின் (பிரிட்டிஷ் அரசின்) சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஒரு சுயராஜ்யம் (Home Rule) மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தை மாற்றி அன்னியரின் (அடக்கு முறை) சட்டத்தையே எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் கண்டவர் மகாத்மா காந்தி. அவருடைய அந்த முடிவே இந்தியா முழுமையான சுதந்திரம் பெற காரணமாக இருந்தது.

சுதந்திரம் பெற்றபோது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்த ஒரு முக்கிய விஷயம் இது. வருங்காலத்தில் வரும் அரசுகள் மேற்கண்ட உண்மைகளை மறந்து போகும் பட்சத்தில் இந்திய மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திலேயே மக்களுக்கு சில அடிப்படை உரிமைகள் வழங்க தீர்மானித்தனர். இந்த உரிமைகளை பாதுகாக்கும் கடமையை அவர்கள் உச்ச நீதிமன்றத்திடமும், உயர் நீதிமன்றங்களிடமும் ஒப்படைக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் குறிப்பிடத் தகுந்தவை

சட்டத்தின் முன்னே அனைவரும் சமமாக நடத்தப்படுவது. (Article 14-16)

தீண்டாமை ஒழிப்பு (Article 17)

ஒவ்வொருவருக்கும் தனி மனித சுதந்திரங்கள் (Article 19)-
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான (ஆயுதங்கள் இல்லாத) கூட்டம் நடத்தும் உரிமை. சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், நாட்டின் எப்பகுதியிலும் வாழும் உரிமை, எந்த தொழிலிலும் ஈடுபட உரிமை.

மேலும் மக்களுக்கு சட்டங்களிலிருந்து வழங்கப் படும் பாதுகாப்புகள் (Article 20)
முன்தேதியிட்ட (கிரிமினல்) சட்டங்களால் அளிக்கப்படும் தண்டனைகளில் இருந்து பாதுகாப்பு. ஒரே குற்றத்திற்கு இருமுறை தண்டனையிலிருந்து பாதுகாப்பு குற்றம் சாட்டப்பட்டவரே அவருக்கு எதிரான சாட்சியம் அளிக்க வலியுறுத்தப் படுவதிலிருந்து பாதுகாப்பு

மக்களுக்கு அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் உரிமைகள் (Article 21)
எந்த ஒருவரையும் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும்

முன்னெச்செரிக்கை கைதுகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் உரிமைகள் (Article 22)
ஒருவர் கைது செய்யப் படும் போது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப் பட வேண்டும். கைது செய்யப் பட்ட நபர் சட்ட ஆலோசனை பெற தடை செய்யக் கூடாது. கைது செய்யப் பட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தப்பட வேண்டும்

இவை மட்டுமல்ல, சுரண்டப் படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிமை (Article 23) சிறுவர்கள் ஆபத்தான வேலைகள் செய்வதை தடுக்கும் உரிமை (Article 24), மத மற்றும் மொழி உரிமை மற்றும் சிறுபான்மையருக்கான சில உரிமைகள் (Article 25-30) அனைத்தும் அரசியல் சாசனத்தால் வழங்கப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் விட மிக முக்கியமான உரிமை, மேலே குறிப்பிட்டுள்ள உரிமைகளை நடைமுறைப் படுத்த உச்ச/உயர் நீதிமன்றத்தை அணுகும் உரிமை (Article 32)



Article 19 இல் உள்ள உரிமைகள் அனைத்தும் எமெர்ஜென்சி காலங்களில் செயல் படாமல் போகும். சாதாரண காலங்களில், பொது நலன் மற்றும் அமைதி காக்கவும், நாட்டின் நலன், ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் காக்கவும், வெளிநாடுகளுடன் உள்ள உறவினை காக்கவும் மேலே சொன்ன உரிமைகள் மீது சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு.



அதே சமயம், கட்டுப்பாடுகள் நியாயமானவைதானா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் இடம் பெறாத சில மனித அடிப்படை உரிமைகளை கூட இனம் கண்டு (இந்தியா உலக மனித உரிமைகளின் சாசனத்தில் கையொப்பம் இட்டதின் அடிப்படையில்) அவற்றை நடைமுறை படுத்திய (மற்றும்) பேணிக் காத்த பெருமை உச்ச நீதி மன்றத்திற்கு உண்டு.



எனவே நண்பர்களே, குறிக்கோளும் அதை அடைவதற்கான பாதைகளும் நியாயமானவையாக இருக்கும் பட்சத்தில் நமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்து கொள்ள இந்திய அரசியல் அமைப்பு சாசனமும் நீதிமன்றங்களும் எப்போதும் துணை இருக்கும்.

நன்றி

Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...