Skip to main content

நிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ

என்னுடைய விவரம் புரியாத வயதில் பழைய படங்கள் பார்க்க செல்லும் போதேல்லாம் தூங்கி விடும் வழக்கம் கொண்ட நான், நம்பியார் வரும் காடசிகளில் மட்டும் (அப்போதுதானே சண்டை காட்சிகளை பார்க்க முடியும்) எழுப்பி விடுமாறு கேட்பேன் என்று என் அம்மா கூறுவார். மேலும் பிடித்த நடிகர் யார் என்று கேட்கும் போதெல்லாம் என் வயதொத்தவர்கள் கமல் ரஜினி என்று சொல்லும் போது நான் மட்டும் நம்பியார் என்று சொல்வேன் என்றும் கேலி செய்வார்.

எனக்கு ஓரளவு விவரம் தெரிந்த போது நம்பியார் அவர்கள் வயது முதிர்ந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவை நடிப்பை மிகவும் விரும்பிய நான், அவர் (சினிமாவில்) கலங்கும் போது பாதிப்பும் அடைந்திருக்கிறேன்.

சினிமா என்ற நிழல் உலகம் வேறு நிஜ உலகம் வேறு என்று அறிந்த வயதிலும் கூட, மன சலனம் எளிதில் ஏற்படக் கூடிய ஒரு துறையில் அவர் பணியாற்றி வந்தாலும் தனி மனித வாழ்வில் ஒழுக்கம் பாராட்டியவர் என்று அறிந்த பின்னர் அவர் நான் விரும்பக் கூடிய ஒரு மனிதராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார் . மேலும் மனம் மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர் என்ற முறையிலும் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கி தொடர்ந்து பல வருடங்கள் சபரி மலைக்கு சென்றவர் என்ற முறையிலும் பெரும் மதிப்புக்கும் உரியவராகவும் இருந்திருக்கிறார். தன்னுடைய சக திரை நட்சத்திரங்களையும் கூட சபரி மலைக்கு அழைத்து சென்று அவர்களையும் ஒழுக்கமான வாழ்வின் சிறப்புகளை உணர செய்த ஒரு சிறந்த குருவுமாக இருந்திருக்கிறார்.

தனது 89 ஆவது வயதில் கூட தனது இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மிக இயல்பான முறையில் இயற்கை எய்தினார் என்றும் இந்த வயதிலும் அவர் முகம் வயது மூப்பை காட்ட வில்லை என்றும் பத்திரிகைகளில் படித்த போது அவர் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை வாழ்நாள் முழுதும் எவ்வளவு சிறப்பாக பேணி இருக்கிறார் என்று ஆச்சர்யப் பட்டேன்.

இப்படி ஒரு போட்டி மிக்க துறையில் சுமார் 60-70 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றியுடன் நிலைத்து நின்றது, தொழில் தனது தனிப்பட்ட வாழ்வை பாதிக்காமல் பார்த்து கொண்டது, நண்பர்களையும் வாழ்வில் உயர்விற்கு அழைத்து செல்ல முயன்றது, மனம் உடல் இரண்டையும் வாழ்நாள் இறுதி வரை சிறப்பாக பேணியது என எல்லா வகையிலும் என் பார்வையில் நிஜ வாழ்வின் ஒரு உண்மையான ஹீரோவாகவே இருந்த மற்றும் இருக்கும் நம்பியார் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய அவருடைய இஷ்ட தெய்வமான சபரி மலை ஐயப்பனை வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி

Comments

அண்ணாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இன்னொரு விசயம் ஒழுக்கமாக இருக்குறதுக்கு சபரிமலை போனாத்தான் முடியும்னு ஒண்ணும் இல்லை. அவருக்கு பிடிச்சிருந்தது போய்கிட்டு இருந்தார்.
KARTHIK said…
வில்லனாக நடித்த நிஜமான ஹீரோ.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டங்களுக்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள வால்பையன்
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டங்களுக்கு நன்றி
MCX Gold Silver said…
வில்லனாக நடித்த நிஜமான ஹீரோ.
astle123 said…
பக்தர்கள் மாலை போட்டு விரதம் கடைபிடிக்கும் புனித தினங்களில் இறைவனுடன் ஐக்கியம் ஆன புனிதரை பிரார்த்திக்கிறேன்.
Maximum India said…
அன்புள்ள வீரன்

உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
Dear Dg

Thank you for the comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...