Skip to main content

தோனியும் திருக்குறளும்

மும்பை பெங்களூரு போன்ற போன்ற பெரு நகரங்களிலிருந்து வரும் மேல் தட்டு மக்கள் மட்டுமே இந்திய கிரிக்கட்டில் கோலோச்ச முடியும் என்பதை சமீப காலங்களில் தகர்த்துக் காட்டியவர் (சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலமாக கருதப் படும் ஜார்கண்டில் இருந்து வந்த) தோனி. இதன் மூலம், ஒருவரது வெற்றிக்கு பிறக்கும் சூழ்நிலையை விட செயல் திறனே முக்கியம் எனும் பொருள் படும்
"பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
எனும் குறளை மெய்ப்பித்து காட்டியவர் தோனி.

இப்போது இந்திய கிரிக்கட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள தோனி, அதன் ஒவ்வொரு வடிவத்திலும் தனது அணியினரிடமிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளி கொண்டு வர மேலாண்மை கல்வி படிக்காமலேயே மேற்கொண்ட (வள்ளுவம் கண்ட) மேலாண்மை தத்துவம் இது.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன் கண்விடல்"
அதாவது யாரால் எதை சரியாக செய்ய முடியும் என்று சரியாக முடிவு செய்து அவரிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டால் தலைவரின் பொறுப்பு முடிந்தது என்று பொருள்.

கிரிக்கெட்டுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை கிரிக்கெட்டில் சில சமயங்களில் காத்திருக்கும் விளையாட்டு (Waiting Game) விளையாட வேண்டி இருப்பதாகும். அதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தோனி
"கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து."
எனும் குறளின் படி பொறுமையாக இருக்க வேண்டிய இடத்தில் கொக்கு போல் பொறுமை காத்து குத்த வேண்டிய தருணத்தில் கொக்கை போலவே வேகமாக குத்தி உலக சாம்பியன்களாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியினை வென்றுள்ளார்.

மற்ற நாடுகளை (அதிக மன அழுத்தம் கொடுத்து) வெல்ல ஆஸ்திரேலியா இதுவரை உபயோகப்படுத்திய வெள்ளையரின் தத்துவம் இது "Cricket is played more on minds rather on the ground". இந்த வெள்ளையரின் தத்துவத்திற்கு தோனியின் பதிலான இந்திய தத்துவம் இது.
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்"
அதாவது மற்றவர் துன்பம் (மன அழுத்தம்) தரும் போது, அதை (சிறப்பாக) தாங்கி கொள்பவர், அந்த துன்பம் தருபவருக்கே துன்பம் (மன அழுத்தம்) தந்து வென்று விடுகிறார்.

இவற்றிக்கெல்லாம் மேலாக (முக்கியமாக) எனக்கு பிடித்த விஷயம் இது. பொதுவாக ஒருவர் ஓய்வு பெறும் போது அவரது மன நிலையை பற்றி மற்றவர்கள் அதிகம் கவலைப் படுவதில்லை. பலர் "Setting Sun" என்று அவர்களை கருதி எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. ஆனால், கும்ப்ளேவை அவரது இறுதி போட்டியின் முடிவில் தோனி தோளில் தாங்கினார். இந்தியாவின் கேப்டனாகவே பெரும்பாலும் அறியப் பட்ட கங்குலிக்கு ஓய்வு பெறும் போது கேப்டனாகவே இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பாக கடைசி சில ஓவர்களில் அணியின் தலைமை பொறுப்பு ஏற்கச் செய்த தோனியின் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
"பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்"
எனும் குறளுக்கு ஏற்ப தோனியின் பெருமை அவரின் அகந்தை இல்லாத தன்மையே ஆகும்.

இந்தியாவிற்கு மேலும் பல வெற்றிகள் பெற்றுத் தர தோனியை வாழ்த்தும் அதே வேளையில், உலகின் எந்த விஷயத்தினையும் தெளிவாக பார்க்க (புரிந்து கொள்ள) உதவும் மூக்கு (மன) கண்ணாடியாம் திருக்குறளை தமிழர்க்கு ஈந்த அய்யன் திருவள்ளுவருக்கு எனது பணிவான நன்றிகள் சமர்ப்பணம்.

நன்றி .

Comments

Unknown said…
Amazing sir....keep rocking :)
new way of thinking :)
forgive me or my comment in english...
Senthil said…
eppadi sir, ippadi ellam yosikkireenga!!
kalakal..interesting..!!
Maximum India said…
நன்றி கமல்.
Maximum India said…
நன்றி சென்.

தமிழ் ஆர்வத்திற்கும் திருக்குறள் ஆர்வத்திற்கும் நான் நன்றி சொல்ல வேண்டியது பதிவுலக நண்பர்களுக்குத்தான்
பின்னிட்டீங்க போங்க...
வள்ளுவனுக்கும் உங்களுக்கும் சலாம்.
Maximum India said…
பின்னூட்டதிற்கு நன்றி
ஆக்குங்கள்

ஒரு விதை
முளைக்கும் போது
சப்தம் ஏதும் செய்வதில்லை;ஆனால்
ஒரு மரம்
விழும் போது
பெரும் சப்தம் எழுப்புகிறது.
அழிவு எப்போதும் சப்தமிடும்; ஆனால்
ஆக்கம் என்றும் அமைதியாக நடக்கும்.
எனவே நாம் ஆக்குபவர்களாக இருப்போம்.
அனாலஜி நன்றாக உள்ளது.
தொடர்ந்து கலக்குங்க............
Anonymous said…
//...திருக்குறளை தமிழர்க்கு ஈந்த அய்யன் திருவள்ளுவருக்கு...//

உங்கள் கவனத்துக்கு:

....... ‘ஐயன் திருவள்ளுவர்’ என்பதில் உள்ள பிழையைமட்டுமே எடுத்துக்காட்டினேன். குமரிக்கடற்கரையில் சிலை அமைத்தபோது கலைஞர், திருவள்ளுவரை ‘ஐயன் திருவள்ளுவர்’என்று குறிப்பிட்டதாக ஏடுகள்வழி அறிந்தேன். உடனே, பெயர் பன்மை ஈறு பெற்றும், அடை ஒருமை ஈறு பெற்றும் வருதல் வழு. ஐயன் என்ற அடைமொழி வேண்டுமென்றால் ‘ஐயன் திருவள்ளுவன்’என்றும், திருவள்ளுவர் என்றே குறிப்பிட விரும்பினால் ‘ஐயர் திருவள்ளுவர்’ என்றும் சொல்வதே மரபுக்கு ஒத்தது என்று 15-1-2000 அன்று, புதுவைத் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் சிறப்புத் தலைவர் என்ற முறையில் கலைஞர்க்கு ஒரு மடல் எழுதினேன். அதனது படி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்க்கும் அனுப்பப்பட்டது. (ஆனாலும் ‘ஐயன் திருவள்ளுவர்’ இன்னும் அப்படியேதான் இருக்கிறார்)...... – முனைவர் இரா. திருமுருகன் (தமிழ்க்காவல் – 17.9.2008)

- அ. நம்பி
Maximum India said…
அன்புள்ள அய்யா (அட்வகேட் ஜெயராஜன்)

உங்களது பின்னூட்டதிற்கு நன்றி.

உங்கள் கவிதையும் கருத்தும் சூப்பர்

நன்றி
Maximum India said…
அன்புள்ள நம்பி

தகவலுக்கு நன்றி
மனித வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் பொருளை புதைந்து வைத்திருக்கிறது குறள்.இந்தியர்களுக்கு பொதுவான வாழ்க்கை புத்தகமாக கீதை என்றால் தமிழர்களின் அடையாளமாக அறியப்பட்டது குறள் .உண்மையில் உலக மக்களின் வாழ்வின் நெறியாக படைக்கபட்டுள்ளது குறள்.. தோனியும் குறளின் கருத்துக்கள் அடிப்படையில் தன்னை நெறிப்படுத்தி கொண்டுள்ளார். குறளில் சொல்லப்பட்டுள்ள தலைமை பண்புகள் அவரிடம் உள்ளன.எதிரியை கையாளும் முறை தெரிகிறது.பொறுமை, அடக்கம் உள்ளது. ஜாலியாக ஒரு கேள்வி திருவள்ளுவர் அய்யரா?சொல்லவே இல்ல
KARTHIK said…
// Sen said...

eppadi sir, ippadi ellam yosikkireenga!!
kalakal..interesting..!!//

:-))

நல்ல ஒப்பீடு.
Maximum India said…
அன்புள்ள ராஜேஷ்

பின்னூட்டதிற்கு நன்றி.

திருவள்ளுவர் அய்யரா இல்ல நாயக்கரான்னு தெரியாது ஆனா சிறந்த மனிதர் என்று தெரியும். அது மட்டுமல்ல அவரை தமிழர் என்ற கூட்டுக்குள் கூட வைக்க கூடாது. அவர் மொத்த மனித குலத்துக்கே சொந்தம்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...